More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது - ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்
அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது - ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்
Feb 25
அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது - ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்

அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம், சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது என்ற பெயரில் ஒரு விருதை புதிதாக ஏற்படுத்தி உள்ளது.



இந்த விருதுக்கு இந்திய பெண் சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் (வயது 48) உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இந்தப் பெண் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் கூறுகிறார்.



இதையொட்டி அவர் கூறியதாவது:-



ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் வெற்றி பெறும் துணிச்சலான நபர்கள் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தரங்களுக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்ற உழைக்கும் நாடுகள் உள்ளிட்ட உறுதியான கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே ஊழலை எதிர்ப்பதில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதைத்தான் ஜோ பைடன் நிர்வாகம் அங்கீகரிக்கிறது.



அந்த காரணத்துக்காக, ஊழலுக்கு எதிராக ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து, துன்பங்களை எதிர்கொண்டு, வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்காக, ஊழலை எதிர்த்து நின்று போராட, தங்கள் சொந்த நாடுகளில் பொறுப்பு கூற வைப்பதற்காக உழைப்பவர்களுக்கு நான் இந்த சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருதை அறிவிக்கிறேன்.



இவ்வாறு அவர் கூறினார்.



இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்தியப் பெண் சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், டெல்லியில் சதார்க் நகரிக் சங்காதன் என்ற அமைப்பை நிறுவி உள்ளார். இந்த அமைப்பு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், பொறுப்பு கூற வைக்கவும், பொதுமக்களின் சுறுசுறுப்பான பங்களிப்பை ஊக்குவிக்கிறது.



மேலும் இவர் மக்களின் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரசார குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். இந்த குழு, ஊழல் தடுப்பு ஆயம் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் கொண்டு வர வெற்றிகரமாக வாதிட்ட குழு ஆகும்.



இந்த விருதுக்கு தேர்வு பெற்றிருப்பது குறித்து அஞ்சலி பரத்வாஜ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த விருது நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul09

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று

Jun25

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி

Sep29

சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க

Jul16

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக

Mar29

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண

Jan27

கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீட

Jan27

அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத

Feb25

உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக

Mar13

உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர

Apr09

நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3

Sep04