More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன!
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன!
Feb 24
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.



பிரதமர் இம்ரான் கான் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.



இரு நாடுகளுக்கும் இடையில் பின்வரும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன,



1. பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.



2. இலங்கை சனநாயகக் சோசலிசக் குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் முதலீட்டுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.



3. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.



4. கொழும்பு தொழில்துறைத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம்.



5. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதாரக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன கைச்சாத்திடப்பட்டுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ

May02

இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர

Jun15

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப

Aug19

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல

Oct14

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே

Mar20

இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய

Oct03

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி

Jan30

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து

Mar09

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்

Mar15

பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர

Mar08

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம

Feb04

தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்

Jan24

பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர

Jul18

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ