More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மும்பை உள்பட மாநிலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!
மும்பை உள்பட மாநிலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!
Feb 20
மும்பை உள்பட மாநிலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் 5 ஆயிரத்து 427 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது புதிதாக 6 ஆயிரத்து 112 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.



இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 87 ஆயிரத்து 632 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 19 லட்சத்து 89 ஆயிரத்து 963 பேர் குணமாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 765 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 44 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 51 ஆயிரத்து 713 பேர் உயிரிழந்து உள்ளனர்.



தலைநகர் மும்பையிலும் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் நேற்று புதிதாக 823 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நகரில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக பாதிப்பு 800-ஐ தாண்டுவது குறிப்பிடத்தக்கது. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் நகரில் பாதிப்பு 700-ஐ தாண்டி இருந்தது.



இதுவரை நோய் தொற்றுக்கு 3 லட்சத்து 17 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல மேலும் 5 பேர் பலியானதால் நகரில் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 435 ஆக உயர்ந்து உள்ளது. நகரில் தற்போது 6 ஆயிரத்து 577 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பை உள்பட மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவது பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.



தாராவியிலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று 6 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் 3 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர்.



இந்தநிலையில் மாநகராட்சி ஊழியர்கள் தாராவியில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov12

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி

Mar03

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச

Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

Aug13

சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா

Apr30

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க

Mar08

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா

Feb13

குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.

May12

வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச்

Jan20

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற

Apr21

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்

Oct18

புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப

Jan28

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக

Apr07

கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்

Aug15

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ

Oct13

தி.மு.க. தலைவ