More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோரூட்டின் சாதனை துளிகள்...
இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோரூட்டின் சாதனை துளிகள்...
Feb 07
இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோரூட்டின் சாதனை துளிகள்...

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் இரட்டை சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.




இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



அவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 377 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 218 ரன்கள் குவித்தார்.



ஜோரூட் இதன்மூலம் பல சாதனைகள் புரிந்தார். அதன் விவரம் வருமாறு:-



* 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோரூட் ஆவார். இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த இன்சமாம் 2005-ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் 184 ரன் குவித்ததே 100-வது டெஸ்டில் அதிக ரன்னாக இருந்தது.



* 218 ரன் குவித்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றார். 8,467 ரன்களை குவித்து அவர் ஸ்டூவர்டை முந்தினார். இலங்கை தொடரில் அவர் பாய்காட், பீட்டர்சன், டேவிட் கோவர் ஆகியோரை முந்தி இருந்தார்.



* ஜோரூட்டின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த குக்குடன் இணைந்தார். ஹேமண்ட் 7 இரட்டை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.



* கேப்டன் பதவியில் ஜோரூட்டின் 3-வது இரட்டை சதம் ஆகும். வேறு எந்த இங்கிலாந்து கேப்டனும் ஒன்றுக்கு மேல் இரட்டை சதம் அடித்ததில்லை.



* கடந்த 3 டெஸ்டையும் சேர்த்து ஜோரூட் 644 ரன்களை குவித்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 229 ரன்னும் (228+1), 2-வது டெஸ்டில் 197 ரன்னும் (186+11) எடுத்தார். இதன் மூலம் 3 டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். கிரகாம் கூச் (779 ரன்), ஹேமண்ட் (763) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.



* சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீன் ஜோன்ஸ் 210 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த டெஸ்ட் டையில் முடிந்தது. ஒட்டு மொத்தத்தில் சேப்பாக்கத்தில் 5 வெளிநாட்டு வீரர்கள் இரட்டை சதம் பதிவு செய்துள்ளனர்.



* 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டு வீரர் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் 302 ரன்கள் (ஐதராபாத்) குவித்திருந்தார்.



3 டெஸ்டிலும் 150 ரன்னுக்கு மேல் எடுத்த 7-வது பேட்ஸ்மேன் ஜோரூட் ஆவார். 



 




 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட

Jul14

வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி

May15

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர

Jul06

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப

Mar09

கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ

Feb05

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து

Sep19

வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ

Mar08

ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறு

Mar06

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ

Jan29

சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர

Oct23

2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்

Feb21

இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட

Sep07

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன

Feb13

ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண

Mar27

15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர