More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!
Feb 13
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!



 



யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



அவர் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்றுக் குறைவடைந்துள்ளது. எனினும், நேற்று முன்தினமும் நேற்றும் திடீரென தொற்றுறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அச்சுவேலி சந்தைப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் நால்வர் மற்றும் பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளை ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



யாழ். மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. யாழில் இப்போது அனைத்துச் செயற்பாடுகளும் இயல்பு நிலையில் உள்ளது. எனினும் சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



 அச்சுவேலி சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே நேற்று நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.



அச்சுவேலிப் பகுதியில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்கள், வெளி மாவட்டங்களிலுள்ள சந்தையுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். இந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்குச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.



புதிய கொத்தணி உருவாகும் சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்.



குறிப்பாக, பாடசாலைகள், மதத்தலங்கள் ஏனைய பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது க.பொ.த. பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அபாய நிலையை உணர்ந்து பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும்.



அத்தோடு, பேருந்துகளில் பயணிப்போர் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி இடங்களுக்கு செல்வோர் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முச்சக்கர வண்டிச் சாரதிகளும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்., அச்சுவேலி சந்தையினை மூடுவதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr27

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது

Mar23

        Gallery

Jun07

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச

May14

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து

Mar16

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை

Sep21

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா

Jun04
May28

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்

Mar28

பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி

Feb03

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின

Sep22

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட

Apr26

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ

Apr13

யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ

Feb03

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச

Mar11

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித