சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து விட்டதாக காங்கிரஸ் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றிய போது, “இந்திய மண்ணை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை. அந்த கடமையிலிருந்து மோடி தவறிவிட்டார். லடாக் எல்லையில் பதட்டத்தை தடுப்பது தொடர்பான உடன்பாடு சீனாவுக்கு சாதகமாக இருக்கிறது. இந்திய இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய மலைப்பகுதிகள் விட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முக்கியமாக சீனாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து விட்டது. கைலாஷ் மலை பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு இடத்தைக்கூட சீனாவுக்கு விட்டுத்தர மாட்டோம் எனக்கூறி நிலையில் ராகுல் விமர்சித்துள்ளார். எல்லைகளை பாதுகாக்க நமது ராணுவம், விமானப்படை , கப்பற்படை தயாராக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய படைகள் கைப்பற்றிய பகுதிகளை பிரதமர், சீனாவிற்கு கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது; தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார், சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார்” என்றார்.