ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து, சபை அமர்வில் பங்கேற்று வருகின்றார்.
நாடாளுமன்ற அமர்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய நிலையில், சபை நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையான 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.
இன்றைய தினம் சபை அமர்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இன்றைய சபை அமர்வுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி நாடாளுமன்றிற்குள் பிரவேசித்த வேளை, கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறப்பிடத்தக்கது.