More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்: GMOA கோரிக்கை
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்: GMOA கோரிக்கை
Feb 05
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்: GMOA கோரிக்கை

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி திறம்பட வழங்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) சுட்டிக்காட்டுகிறது.



கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அச்சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் ஹரித அளுத்கே, கொவிட்-19 இறப்புகளில் 70 வீதமானவை தொற்றுக்குள்ளான 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களிடமிருந்தே பதிவாகிறது என்றார்.



தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட 10 வீதமானோரே கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். எனவே 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.



குறித்த வயதில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் இறப்புகளின் எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரிக்கக்கூடும் என்றும் மருத்துவர் அளுத்கே கூறினார்.



இந்த வேளையில் திருமணங்கள் மற்றும் விருந்துபசாரங்களில் அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வதால் இந்நோய் வேகமாகப் பரவுகிறது என்றார்.



கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் நிலையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுடன் சிகிச்சை நிலையங்களில் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.



கொவிட்-19 காரணமாக அண்மையில் உயிரிழந்த ராகம வைத்தியசாலை மருத்துவர் கயான் தந்தநாராயண, தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை வசதிகள் இல்லாததால் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது என்று  மருத்துவர் அளுத்கே மேலும் கூறினார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்

Feb12

காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு

Mar14

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ

May28

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்

May02

சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ

Feb05

நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த

May21

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா

Feb25

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்

Dec29

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள

Mar04

கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற

Sep22

தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில

Oct07

நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி

Sep29

ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்

Mar16

கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம

Jan27

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய