இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அந்தவகையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றுஆரம்பமாகின்றது.
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
இதனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் இத் தொடரானது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில் மற்றொரு அணி எது என்பது இத் தொடரின் மூலம் தெரிய வரும். டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி குறைந்தது 2-0, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றாக வேண்டும்.
இங்கிலாந்து அணி இறுதி சுற்றை எட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக 3 டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா:
ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி (தலைவர்), புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், அக் ஷர் பட்டேல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா அல்லது முகமது சிராஜ்.
இங்கிலாந்து:
ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ ரூட் (தலைவர்), ஆலி போப், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ்வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் அல்லது ஸ்டூவர்ட் பிராட்.