More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரைந்து இணைய வேண்டும் என ஈரான் மந்திரி வலியுறுத்தியுள்ளார்!
அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரைந்து இணைய வேண்டும் என ஈரான் மந்திரி வலியுறுத்தியுள்ளார்!
Feb 07
அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரைந்து இணைய வேண்டும் என ஈரான் மந்திரி வலியுறுத்தியுள்ளார்!

அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.



அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.



இதற்கிடையே, தற்போது அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் போய் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்தால் அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையும் என்று ஜோ பைடனின் நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.



இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளுடன் ஈரான் மீண்டும் இணங்கி நடந்தால் ஒரு நீண்ட மற்றும் வலுவான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இறங்கி வரும் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.



இந்நிலையில், 2015- அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார்.



வரும் 21-ம் தேதிக்குள் அமெரிக்கா பொருளாதார தடைகளை தளர்த்தாவிடில் , ஈரான் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியதையும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட

Mar13

 உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே

Aug06

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Feb28

ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக

Mar27

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

Mar12

கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத

Mar07

ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய

Mar17

ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந

May23

  உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத

Jan28

அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி

Sep18

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை

Mar27

ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் ப

Feb26

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக

May21

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப

Jun04

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ