இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட், உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெள்ளை பந்து கிரிக்கெட் அணிக்கென ஒரு கேப்டனையும், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கென ஒரு கேப்டனையும் நியமித்துள்ளது. ஓரளவிற்கு இரண்டும் வெவ்வேறு அணிகள் என்றே சொல்லலாம். வெள்ளைப்பந்து அணிகளுக்கு மோர்கன் தலைவராகவும், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜோ ரூட் தலைவராகவும் உள்ளனர். ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் போன்றவர்கள் மட்டுமே மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
கொரோனா காலத்திற்குப்பின் டெஸ்ட் அணி தலைவரும், இங்கிலாந்தின் தலைசிறந்த வீரருமான ஜோ ரூட்டிற்கு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ரி 20 தொடரில் இடம் கிடைக்கவில்லை.
இதனால் அவருடைய ரி 20 கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நடைபெற இருக்கும் ரி 20 உலகக் கோப்பையில் விளையாட ரும்புவதாக தெரிவித்துள்ளார்.