திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்குள் நேற்று கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக தகவல் பரவியதை அடுத்து வெந்நீர் ஊற்றுப் பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளி நபர்கள் உள்ளே செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதான வாயில் கதவில் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன் வாயிலிலும் உள்ளேயும் உப்புவெளி பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது