More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்றும் தொடர்கிறது!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்றும் தொடர்கிறது!
Feb 04
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்றும் தொடர்கிறது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு தாழங்குடாவில் ஆரம்பமாகி முல்லைத்தீவை நோக்கி செல்லவுள்ளது.



மழைக்கு மத்தியில் நேற்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.



முன்னதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸ் துறைகள் ஊடாக இப்போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.



இந்த போராட்டம் நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பல இடங்களில் தடையுத்தரவுகளை வழங்க பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டபோது அவற்றினை புறந்தள்ளி போராட்டத்தில் பங்குகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.



எனினும் நீதிமன்ற தடை உத்தரவுக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.



அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குயேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா

Sep20

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத

May22

வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த

Mar19

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண

Oct18

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு

Sep21

நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட

Oct14

களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம

Oct05

சீனாவுடன்  கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒ

Feb04

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாள

Mar29

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையா

May11

நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா

Feb06

நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல

Aug09

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப

Feb03

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ

Jan12

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில