More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எம்மிடம் துப்பாக்கி இல்லை; இராணுவமே சுட்டது- வவுனியாவில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிப்பு!
எம்மிடம் துப்பாக்கி இல்லை; இராணுவமே சுட்டது- வவுனியாவில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிப்பு!
Feb 03
எம்மிடம் துப்பாக்கி இல்லை; இராணுவமே சுட்டது- வவுனியாவில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிப்பு!

இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி இராணுவமே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக செட்டிக்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.



வவுனியா செட்டிக்குளம் பேராறு காட்டுப் பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.



குறித்த இளைஞன் உட்பட மூவர் கடந்த 31ஆம் திகதி பேராறு காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், தங்கள் மீது மறைந்திருந்த இராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.



இராணுவத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையால் அவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது. எனினும், தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.



தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும் மீண்டும் வீடுநோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இராணுவம் திடீரென தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.



இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின

May01

அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த

Apr07

யாழ். மாவட்டத்தில் நாளை  (08) முதல் தேநீர், பால் தேநீர், ப

Apr02

இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித

Jan27

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி

Oct04

 

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய

Feb10

 கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா

Jan19

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய

Jun20

காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற

May03

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம்  அர

Apr02

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன

Sep20

தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு

Jul03

டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப

Mar08

கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த

Mar09

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்