More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்க்க புதிய அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்!
அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்க்க புதிய அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்!
Jan 30
அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்க்க புதிய அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்!

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவி ஏற்றார். அவர் முந்தைய அதிபர் டிரம்ப் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளுக்கு தடை விதித்து கையெழுத்திட்டார்.



அதில், மெக்சிகோ நாட்டு எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அளிக்கும் நிதி திட்டத்துக்கு தடை விதித்தது முக்கியமானதாகும். அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக் காவுக்குள் நுழைபவர்களை தடுக்க அங்கு பிரமாண்ட தடுப்புச்சுவரை டிரம்ப் கட்டினார்.



அதேபோல் பல்வேறு குடியேற்ற கொள்கைகளை கொண்டு வந்தார். இதில் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து முகாம்களில் தங்க வைக்க டிரம்ப் உத்தர விட்டார். இதையடுத்து பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தவித்து வருகிறார்கள்.



இந்த நிலையில் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்க்க புதிய அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.



முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை, குழந்தைகளை மீண்டும் ஒன்றிணைக்க அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் தனது கணவரின் முயற்சிகளில் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.



இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறும்போது, ‘பிரிக்கப்பட்ட குடும்பங்களையும், குழந்தைகளையும் ஒன்றிணைப்பதற்காக ஒரு பணிக்குழுவை தொடங்குவது குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்க ஆர்வமாக உள்ளார் என்றார்.



பெற்றோருடன் மீண்டும் சேர்க்க வேண்டிய 2,700-க் கும் மேற்பட்ட குழந்தைகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் 611 குழந்தைகளின் பெற்றோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று அமெரிக்க சிவில் சுதந்திரங்கள் யூனியன் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct11

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா

Mar24

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய

Jul24

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன

Feb27

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந

Mar04

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக

Jan06

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இ

Jun18

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந

Apr25

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா

Mar07

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா

Mar05

மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்

Oct01

வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த

Sep05

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Mar12

உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ

Apr02

இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ