கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 505ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்றால் மேலும் 916 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 58,075 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில்839 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந் தவர்களின் மொத்த எண்ணிக்கை 316 ஆக அதிகரித் துள்ளது.