ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் நாட்டுப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இதனை சீர்செய்வதற்காக ஆர்ஜென்டினாவில் செல்வந்தர்களுக்கு சிறப்பு வரி விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அதன்படி ஆர்ஜெண்டினாவில் 200 மில்லியனுக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள் நாட்டுக்குள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு 3 % வரியும், வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களுக்கு 5 % மேல் வரியும் செலுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
‘மில்லியனர் வரி’ என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு வரி மூலம் 2.5 மில்லியன் யூரோ பணம் திரட்ட முடியும் என்று அரசு நம்புகிறது. இதில் 12 ஆயிரம் பேர் வரை வரி செலுத்த வேண்டியது இருக்கும்.
கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது அர்ஜெண்டினாவில் அமுலுக்கு வந்துள்ளது.