யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளர் ஒ ரு வ ரு க் கு க் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இ து தொட ர் பி ல் அ வ ர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 21ஆம் திகதி கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்பட்ட நபருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த நபர் சிகிச்சைக்காகக் கடந்த 23ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை நேற்றுமுன்தினம் மேற்கொள் ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்
தெரியவந்தது.
இதனால் அவருக்குச் சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர் என்றார்.