தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இன்றைய தினம் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் நபர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் 12 இடங்களில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்ட பொது இடங்கள், பொதுச் சந்தைகள், மீன் விற்பனை நிலையங்க,ள் மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களிலும் துரித அன்டிஜன் பரிசோதனை மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.