More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர!
ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர!
Jan 25
ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர!

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.



மாத்தறை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.



முதலாவது அலையை முடக்க கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடிந்தது என குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தையும் நாட்டையும் தொடர்ச்சியாக நிறுத்திவைக்க முடியாது என ஜனாதிபதி கருதுவதாகவும் குறிப்பிட்டார்.



இதேவேளை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால், சுற்றுலாத்துறையினால் கிடைக்கும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை நாடு இழந்தது என்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சுட்டிக்காட்டினார்.



தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் அன்றிலிருந்து அத்துறை மீளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



இவ்வாறு கடன் சுமையில் இருந்தபோது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்றும் இருப்பினும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வட்டி விகிதத்தைக் குறைக்கவும் தங்களால் முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct05

கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா

Jun08

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ

Oct24

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற

Apr30

அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர

Mar08

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி

Mar24

ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில

Sep22

முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக்  கூட்டம் இன்று க

Jun07

கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்

Jun20

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்

Feb01

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு

Feb02

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப

Jan19

வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய

Jan25

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய

Apr12

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக

May18

இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப