டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கரோலினா(Carolina Marin) , விக்டர் ஆக்சல்சென்( Viktor axelsen ) மீண்டும் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.
டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பட்மிண்டன் போட்டி பாங்கொக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.
அந்தவகையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான கரோலினா மரின்(ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘முன்னணி’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார்.
கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபனிலும் இதே தாய் ஜூ யிங்கை வீழ்த்தி தான் கரோலினா மகுடம் சூடியது நினைவு கூரத்தக்கது.
இரண்டு வாரங்களில் 2 சம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை வியப்புக்குரிய வகையில் தொடங்கி இருக்கிறேன்’ என்று கரோலினா குறிப்பிட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-11, 21-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்கை பந்தாடி மீண்டும் பட்டத்தை சொந்தமாக்கினார். அடுத்ததாக உலக டூர் இறுதி சுற்று போட்டி இதே பாங்கொக்கில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.