More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ’முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வர்; கல்லூரி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!
’முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வர்; கல்லூரி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!
Jan 25
’முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வர்; கல்லூரி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. நடப்பாண்டு இந்த தினத்தைச் சிறப்பிக்கும் வகையில்                                                                                                                                                                                                                                                                                                                                                உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒருநாள் பெண் முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பு தவுலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீஷ்டி கோஸ்வாமி என்ற இளம்பெண்ணிற்கு கிடைத்துள்ளது. இவர் கல்லூரியில் பி.எஸ்சி அக்ரி படித்து வருகிறார்.



இவரது தந்தை தவுலத்பூர் கிராமத்தில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றார். தாயார் அங்கன்வாடி ஊழியராக உள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக ஸ்ரீஷ்டி கோஸ்வாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் பங்கேற்றார்.                                                                                                                                                                                                                                                                                                                                     பின்னர் உத்தரகாண்டின் கோடைக்கால தலைநகரான கெயிர்செயினில் இருந்து கோஸ்வாமி தனது பணிகளை கவனிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மாநில அரசின் அடுல் ஆயுஷ்மான், ஸ்மார்ட் சிட்டி, ஹோம்ஸ்டே உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகளை பார்வையிடுகிறார்.



இதுபற்றி கோஸ்வாமியின் தந்தை பிரவீன் பூரி கூறுகையில், ஸ்ரீஷ்டி மிகவும் புத்திசாலியான பெண். அனைத்து பெண்களின் நிலையையும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பெண் குழந்தைகள் கல்வி கற்க உதவும் சமூக அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May14

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,

Jun12

முதல்-மந்திரி 

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில

Apr04

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம

Oct01

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி

Mar11

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ

May12

வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச்

Jun30