கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இனி பொலிஸார் வீடு வீடாகச் சென்று தேடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் தோட்ட நிர்வாக உயர் அதிகாரிக்கும் தோட்ட தலைவர், பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டமாக இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் தொடர்புபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருந்தும் இச்சம்பவத்தில் தொடர்புபட்ட ஏனைய தரப்பினர்களையும் பொலிசார் பிடியாணைபிறப்பின் உத்தரவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையிலே இவ்விடயத்தினை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நுவரெலியா இ.தொ.கா
பிராந்திய காரியாலயத்தில் தோட்ட தலைவர்கள், தலைவிமார்கள் சம்பவத்துடன் தொடர்புபட்ட பொதுமக்கள் என பலரும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.