இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் போட்டி 5ஆம் திகதியும், 2-வது போட்டி 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இங்கிலாந்து அணி தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் “உலகின் தலைசிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதென்பது சவாலான காரியம் எனத் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக நாங்கள் நான்கு போட்டிகளில் விளையாடவுள்ளோம். இந்திய மண்ணில் எங்கள் ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக விளையாடினால் தான் இந்தியாவை எங்களால் வெல்ல முடியும்.
அயலக மண்ணில் நாங்கள் தடுமாறி இருந்தாலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றுள்ளது ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார் ரூட்.