More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்
ஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்
Jan 26
ஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.



நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “1958 களில் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அடக்கு முறை 2009 இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இராணுவ பிடிக்குள் அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.



நடைபெற இருக்கின்ற ஐ.நா.மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.



போர்க்குற்றங்கள் தொடர்பான குழு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த விதமான தகுதிகளும் இல்லை. கோட்டாபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக இருந்த போதுதான் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது.



போர்க் குற்றம் புரிந்தவர்களே போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு குழு நியமிப்பது ஒரு கேளிக் கூத்தான விடயம். இந்த குழுவை சர்வதேசமோ ஐ.நா மனித உரிமைப் பேரவையோ எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.



அவர்களும் இதை ஒரு கேளிக்கை விடயமாகவே பார்ப்பார்கள்.  நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்து கொண்டு சர்வாதிகார போக்கிலான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இருக்கின்றது.



1958 காலப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் 2009ஆம் ஆண்டு மிகப் பெரிய இனப்படுகொலை நடந்த பின் அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களை இராணுவப்பிடிக்குள் வைத்து தமிழர்களின் நில அபகரிப்பு, மத அடையாளங்கள் அழிப்பு, கலாசாரங்கள் அழிப்புக்கள் தொர்ந்து கொண்டிருக்கின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep29

இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க

Jul14

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு

Mar03

இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம

Mar14

பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ

Jan28

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந

Mar14

 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்

Sep21

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி

Feb07

2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம

Mar27

கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர

Oct15

அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர

Sep20

நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில

Feb09

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற

Oct04

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ

Mar10

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால

Jan27

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய