More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் காட்டமான அறிக்கை – அரசாங்கத்தின் பதில் இன்று!
இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் காட்டமான அறிக்கை – அரசாங்கத்தின் பதில் இன்று!
Jan 26
இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் காட்டமான அறிக்கை – அரசாங்கத்தின் பதில் இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான பதிலை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



இந்த விடயம் குறித்து தேசிய தமிழ் ஊடகமொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அந்த அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.



மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதன்போது குறிப்பிட்டுள்ளார்.



அந்த அறிக்கையில் காணப்படும் தரவுகள், குறைபாடுகள், பிழைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது தனித்தனியாக ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



மிக ஆழமாக ஆராய்ந்ததன் பின்னர் அந்த அறிக்கைக்கான பதிலை இன்று மாலை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்  ஜயனாத் கொலம்பகே கூறியுள்ளார்.



இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்படும் பதில் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.



மேலும் அதனை பேரவை கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பார் எனவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.



46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில், இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் உள்ளிட்ட காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல

Sep19

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்

Mar03

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி

Jul17

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த

Mar05

நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு  மரக்கறி ஏற்றச் சென்ற

Feb08

வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில

Oct16

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற

Aug05

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால

Feb28

கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி

Sep06

 இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச

Mar19

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப

Mar16

சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு

Mar13

இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை

Jul15

நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ

May15

இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள