பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள.
ஆறு ஏக்கர் பரப்பளவில் 16 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்தக் கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.