More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று!!
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று!!
Jan 21
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று!!

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும், 2 ஊழியர்களும் அடங்குவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.



அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



மன்னார் பொது வைத்தியசாலை மருத்துவ விடுதியில் கொரோனா நோயாளிகள் இருவர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.



இந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறிப்பட்டது.



தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும் சுகாதார ஊழியர்கள் இருவரும் என நால்வர் சுயதனிமைப்படுத்தபட்டிருந்தனர்.



குறித்த நால்வருக்கும் கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட

Sep16

தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல

Oct10

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர

Mar31

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்ப

Sep24

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்

Jan22

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில

Apr07

ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண

Apr11

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந

Mar04

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ

Feb07

மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட

Apr20

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்

Oct26

நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை

Apr03

இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த

Sep22

வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள

Jul08

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத