டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டொமினிக்கன் குடியரசில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 145பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 52ஆவது நாடாக விளங்கும் டொமினிக்கன் குடியரசில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 496பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 473பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 158பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 332பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 46ஆயிரத்து 491பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.