More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!
Jan 19
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.



யாழ்.ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.



இதன்போது பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட நிலையில், மாணவர்களினதும் தாயகத்தின் புலம்பெயர் தேசங்களிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஆதரவுகளினாலும் போராட்டங்களினாலும் மீண்டும் தூபி அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



ஆகையினால் இத்திட்டத்திற்கு நிதி தேவைப்படுவதால், அதற்கான நிதி உதவியை வழங்குமாறு அனைவரிடமும் மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.



இந்த நிதியுதவியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடுமாறும் வங்கி கணக்கு இலக்கத்தையும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு மாணவர் ஒன்றியத்திடம் மாத்திரமே இந்த நிதி உதவியை வழங்குமாறும் வேறு இடங்களில் இதற்கான நிதி சேகரிக்கப்படவில்லை என்பதையும் ஏதேனும் சேகரிப்புகள் இடம்பெற்றால் அதற்கு மாணவர் ஒன்றியம் பொறுப்பில்லை என்பதனையும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ

May12

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்

Sep08

இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப

Jan28

கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ

Apr17

தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப

Sep23

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்

Jan22

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ

May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

Jan19

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள

May12

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க

Aug19

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல

May31