More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அவுஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை தருவதாக கூறி ஏமாற்றிய போலி வைத்தியர்!!
அவுஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை தருவதாக கூறி ஏமாற்றிய போலி வைத்தியர்!!
Apr 06
அவுஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை தருவதாக கூறி ஏமாற்றிய போலி வைத்தியர்!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த நபரை பொரளை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.



இந்த சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட மேலும் இருவர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.



அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி வைத்தியர் போல் நடித்து 65,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக மருதானையை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.



அவ்வாறே குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 50,000 ரூபா பணம் கேட்டுள்ளனர்.



சந்தேகநபர் தனக்கு இரண்டு ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதாகவும், இருவருக்கு அங்கு தொழில் செய்ய வாய்ப்பு தருவதாக கூறி இந்த இருவரிடமும் மோசடியாக பணம் பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.



சந்தேகநபர் நேற்று (05) கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தாம் போலி வைத்தியர் என ஒப்புக்கொண்டார்.



மேலும் முறைப்பாட்டாளர்களிடம் தீர்வு காண விருப்பம் தெரிவித்துள்ளார்.



எவ்வாறாயினும், இந்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan11

கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச

Feb16

கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்

May11

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி

Sep19

வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ

Mar08

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப

Sep19

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட

Feb07

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு

Feb05

கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி

Sep16

வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக

Mar05

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டா

Feb04

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந

Feb05

நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த

Jan31

வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப

Sep16

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச

Feb12

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர