திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உத்தியோகத்தர் ஒருவரின் நிர்வாணப்படங்களை, அவரது கணவரின் கைத்தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்களுக்கு அனுப்புவதாக மிரட்டி, 26 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை பெற்ற சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அரச உத்தியோகத்தரான பெண், குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடன் முறைசாரா உறவைப் பேணி வந்துள்ளதாகவும், அதன்போது குறித்த அரச உத்தியோகத்தரின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 2019 ஆம் ஆண்டிலிருந்து, சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் அரச உத்தியோகத்தரை மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து சிறிபுர பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துசெய்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.