யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம், யாழ்ப்பாணம், அச்சுவேலி கோப்பாய், காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நூதனமான முறையில் நான்கிற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டில் ஈடுபட்ட இனம்தெரியாத நபர்களை கைது செய்வதற்கு சிசிடிவி கமரா உதவியுடன் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.