More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் சோகம்! தந்தை, தாய் இரு குழந்தைகள் சடலங்களாக மீட்பு
வவுனியாவில் சோகம்! தந்தை, தாய் இரு குழந்தைகள் சடலங்களாக மீட்பு
Mar 07
வவுனியாவில் சோகம்! தந்தை, தாய் இரு குழந்தைகள் சடலங்களாக மீட்பு

வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.



இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.



எனினும் அவர் பதிலளிக்காததை அடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.



இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.



சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த 42 வயதான சிவபாதசுந்தரம் கௌசிகன் வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான 36 வயதுடைய கௌ.வரதராயினி, இரு பிள்ளைகளான கௌ. மைத்ரா (வயது 9), கௌ.கேசரா (வயது 3) ஆகியோர் உறங்கிய படியும் சடலமாக மீட்கப்பட்டனர்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிஸார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர

Sep19

தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந

Sep30

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ

Oct06

இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித

Mar24

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி

Mar02

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு

Sep30

சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்

Sep19

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி

Jan21

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா

Jul27

பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய

Mar12

எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம், 

Jun08

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர

May02

கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ

Apr19

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ

Oct25

சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,