வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.
ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த வாரம் பாரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஆயாவாளர்கள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.