More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்த் தூள் பூசிய கணவன்!!
மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்த் தூள் பூசிய கணவன்!!
Mar 03
மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்த் தூள் பூசிய கணவன்!!

பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல்,  அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.



சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயான 39 வயதான பெண் இது தொடர்பில், பாதுக்க பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.



மதுபோதையில் வந்த தன்னுடைய கணவன், தன்னுடைய கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு அட்டை அல்லது புழுவொன்றை தன்னுடைய உடலுக்குள் செலுத்தினார். அது தனக்கு கடுமையான வலியை ஏற்படுத்தியது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அவ்வாறு செய்வதற்கு இடமளிக்காமல் விட்டால், கடுமையான தாக்குதல்களை மேற்கொள்வார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தன்னுடைய 11 வயதான மகளின் முன்னிலையிலேயே இவ்வாறு தாக்குதல் நடத்துவார் எனத் தெரிவித்த அந்த பெண், இதனால் மகளும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், நான்கு வயதில் குழுந்தையொன்றும்  தனக்கு இருக்கிறது என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.



சந்தேகநபர் சாரதியாக கடமையாற்றுபவர் என்றும் அவருக்கு நிரந்த தொழில் இல்லை என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், சந்​தேகநபரான அவருடைய கணவன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார் என்றும் அவரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய

Mar16

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்

Oct26

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க

Jun18

இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு

Jan19

வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய

Jan24

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்

Mar14

இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்

Jul25

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ

Sep26

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன

Apr02

கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற

Sep15

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந

Mar07

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்

Jan20

இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.

அம்பா

Feb19

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப