More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம்!
அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம்!
Sep 27
அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம்!

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி வருவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



மாவடிப்பள்ளி பாலம், சம்மாந்துறை பகுதி, ஒலுவில் பகுதி, நிந்தவூர். மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.



இம்மாவட்டத்தில் உள்ள வாவிகள், குளங்கள் மற்றும் களப்புக்களில் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முதலைகளினால் இரைக்குள்ளாவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தப் பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய அறிவுறுத்துதல்களோ எச்சரிக்கை பலகைகளோ இதுவரையும் வைக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



எனவே இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct17

தொடரும் பொருளாதார  நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி

Mar27

கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர

Aug10

ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வ

Jul24

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல

Jul16

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப

Oct14

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த

Dec30

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீ வை

Apr10

விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா

Mar09

வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ

Feb04

பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப

Oct08

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந

Jan26

பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை

Jul16

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 157 ப

Jul13

நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத

Jan27

ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா