More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விலங்குணவு உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி!
விலங்குணவு உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி!
Sep 23
விலங்குணவு உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி!

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் சோளம் தேவைப்படுகின்றது. எனினும் தற்போது சந்தையில் சோள தட்டுப்பாடு நிலவுகின்றது.



எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உணவு உற்பத்திக் கம்பனிகளுக்கு விலங்குணவு உற்பத்தி மூலப்பொருள் விநியோகத்தர்கள் மூலம் 225000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.



எனினும் தற்போது நிலவுகின்ற அந்நிய செலாவணிப் பற்றாக்குறையால் ஜூன் மாத இறுதி வரைக்கும் 38000 மெட்ரிக்தொன் சோளம் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.



தற்போது உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ சோளம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் அதனால் விலங்குணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.



கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழிக் குஞ்சுகளை உற்பத்திகளை மேற்கொள்ளாமல் முட்டையை விற்பனை செய்தல் மற்றும் கோழி வளர்ப்பிலிருந்து விலகுதல் போன்றவற்றால் எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்புத் துறையில் பாரிய நெருக்கடிகள் ஏற்படக்கூடுமென அவதானிக்கப்பட்டுள்ளது.



அதனால் கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விலங்குணவு உற்பத்திக்குத் தேவையான சோளம் அல்லது ஏனைய பொருத்தமான தானிய வகைகளை 25000 மெட்ரிக்தொன் இறக்குமதி செய்வதற்கு உணவு ஊக்குவிப்பு சபைக்கு அனுமதி வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr11

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந

Feb24

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ

Apr16

வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை

Sep22

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு

Sep25

பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ

Mar08

இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண

Sep23

இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே

Feb14

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின

Feb04

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய

Sep19

பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின

Sep19

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்

Mar05

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும

Jan27

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய

Feb01

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ

Sep19

கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ