More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விலங்குணவு உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி!
விலங்குணவு உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி!
Sep 23
விலங்குணவு உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி!

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் சோளம் தேவைப்படுகின்றது. எனினும் தற்போது சந்தையில் சோள தட்டுப்பாடு நிலவுகின்றது.



எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உணவு உற்பத்திக் கம்பனிகளுக்கு விலங்குணவு உற்பத்தி மூலப்பொருள் விநியோகத்தர்கள் மூலம் 225000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.



எனினும் தற்போது நிலவுகின்ற அந்நிய செலாவணிப் பற்றாக்குறையால் ஜூன் மாத இறுதி வரைக்கும் 38000 மெட்ரிக்தொன் சோளம் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.



தற்போது உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ சோளம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் அதனால் விலங்குணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.



கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழிக் குஞ்சுகளை உற்பத்திகளை மேற்கொள்ளாமல் முட்டையை விற்பனை செய்தல் மற்றும் கோழி வளர்ப்பிலிருந்து விலகுதல் போன்றவற்றால் எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்புத் துறையில் பாரிய நெருக்கடிகள் ஏற்படக்கூடுமென அவதானிக்கப்பட்டுள்ளது.



அதனால் கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விலங்குணவு உற்பத்திக்குத் தேவையான சோளம் அல்லது ஏனைய பொருத்தமான தானிய வகைகளை 25000 மெட்ரிக்தொன் இறக்குமதி செய்வதற்கு உணவு ஊக்குவிப்பு சபைக்கு அனுமதி வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க

Oct01

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு

Oct13

வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச

May04

இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக

Mar30

இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே

Mar13

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி

Feb05

கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி

Jan15

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா

Sep10

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க

Mar03

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ

Sep07

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா

Sep25

சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்

May15

இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி

Jan22

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்

Feb10

  கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்