More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!
Sep 23
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் நேரு குடும்பத்தினர் உறுதியாக இருப்பதாகவும் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.



மேலும்இ வேட்புமனுத்தாக்கல் செய்யும் திகதியை விரைவில் முடிவு செய்ய உள்ளதாகக் கூறிய அவர்இ தான் காங்கிரஸ் தலைவரானால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொதுச் செயலாளர் அஜய் மேகன் மற்றும் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முடிவு செய்வார்கள் என கூறினார்.



தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.



காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்திஇ கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்துஇ சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.



இந்த நிலையில்இ கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (சனிக்கிழமை) தொடங்கவுள்ளது. செப்டம்பர் 30ஆம் திகதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.



வாக்கு எண்ணிக்கை ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



கெலாட் தவிரஇ காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், திக்விஜய் சிங், மணீஷ் திவாரி ஆகியோரும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்

Aug19

போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய

Apr14

அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம

Apr30

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்

Jul20

பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற

Mar09

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த

Jul14

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின்

Aug22

வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ

Apr23

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட

Jul04