2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஒரு நாள் சேவையின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் அத்தியாவசியமானதல்ல என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரி ஒருவர் பாடசாலை விண்ணப்பதாரியாக இருந்தால் அதிபரினால் வழங்கப்பட்ட பெறுபேறு சான்றிதழ் அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் உறுதிப்பாட்டின் கீழ் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறு உறுதிப்படுத்தல் ஆவணம் போதுமானது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
வெளிவாரியான விண்ணப்பதாரியாக இருந்தால் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் உறுதிப்படுத்தலின் கீழ் பணம் செலுத்தி பெற்றக்கொள்ளப்பட்ட பெறுபேறு உறுதிப்படுத்தல் ஆவணம் போதுமானது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.