More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட புத்தகக் கண்காட்சி!
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட புத்தகக் கண்காட்சி!
Sep 22
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட புத்தகக் கண்காட்சி!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி இன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றுவரும் 23ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.



இதன்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.



சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



இன்று காலை கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி,  இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர உள்ளிட்டோர் வரவேற்றனர்.



இந்த வருட புத்தகக் கண்காட்சியில் 400 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் விற்பனைக் கூடங்கள் இடம்பெற்றுள்ளன.



ஜனாதிபதி அவற்றை நேரில் சென்று பார்வையிட்டதுடன் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனும் சிறிது நேரம் உரையாடினார்.



கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்களுடன்இ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா

Mar30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ

May06

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம

Mar08

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்

Jul14

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்

Jan19

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’

Aug23

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி

Jun25

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள ந

Jun30

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க

May15

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த

Jan25

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி

May04

எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ

Feb05

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்

Mar07

வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச

Jun15

மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா