More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விபசாரத்தை குறிப்பிடவில்லை – டயனா கமகே!
விபசாரத்தை குறிப்பிடவில்லை – டயனா கமகே!
Sep 22
விபசாரத்தை குறிப்பிடவில்லை – டயனா கமகே!

இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பேசும்போது தான் ​​விபசாரத்தை குறிப்பிடவில்லை என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரவு வாழ்க்கை விபசாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார்.



நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது கலாசாரம் மற்றும் மதம் பற்றி பேசுபவர்கள் இலங்கையை எவ்வித அபிவிருத்தியும் இன்றி தேக்கமடையச் செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.



இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் மேலும் தெரிவித்துள்ள அவர் 'நாட்டை முன்னேற்ற முயற்சி எடுக்கும்போது சிலர் கலாசாரம் மற்றும் மதம் பற்றி பேசத் தொடங்குகிறார்கள். துறவிகள்கூட என்னை விமர்சித்துள்ளனர். மதம் பற்றி பேசி என்னை விமர்சிப்பவர்கள் பௌத்தம் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.



மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். நான் இந்த முன்மொழிவை முன்பே செய்துள்ளேன். மீண்டும் ஒரு முறை முன்மொழிய விரும்புகிறேன்.



மதுக்கடைகளை முன்கூட்டியே மூடும் போது பின்வாசல் வழியாக அனுமதியின்றி விற்பனை நடக்கிறது. இதுபோன்ற விற்பனை மூலம் அரசு வரி வசூலிக்க முடியாது. அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பீர் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்றும் நான் முன்மொழிகிறேன். ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இரவில் சிறிது மதுபானம் வாங்க முடியும்.



கஞ்சா தோட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் நான் முன்மொழிந்தேன்.  அது மக்கள் சாலையோரத்தில் கஞ்சா எடுப்பதை அங்கீகரிக்க வேண்டுமென நான் கூறவில்லை. கஞ்சாவை ஆயுர்வேத மருந்தாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து' என அவர் மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட

Feb25

அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த

Jan28

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத

Mar18

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள

Feb10

பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர

Jun07

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்

Apr03

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற

Apr13

யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ

May03

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக

Sep15

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந

Feb02

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட

Jun05

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவ

Mar08

ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி

Jan25

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்

Feb16

இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற