More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம் - பந்துல!
பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம் - பந்துல!
Sep 21
பயன்படுத்த முடியாத புகையிரத தண்டவாளங்களை விற்பனை செய்யத் தீர்மானம் - பந்துல!

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளம் செலுத்துவது கூட சவால்மிக்கதாக உள்ளது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தண்டவாளங்களை சர்வதேச விலைமனுகோரல் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது எதிர்தரப்பின் உறுப்பினர் அசோக அபேசிங்க முன்வைத்த வாய்மொழி மூலமான வினாவுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



பொல்கஹாவெல-குருநாகல் புகையிரத பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் எப்போது நிறைவு பெறும் என்பதை குறிப்பிட முடியாது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



பொருளாதார நெருக்கடியினால் அரச முறை கடன் மீள் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் அரச முறை கடனை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.



இக்காரணிகளினால் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான முதலீட்டு தவணை ஒதுக்கீடும் தாமதப்படுப்பட்டுள்ளன. பொல்கஹாவெல- குருநாகல் இரட்டை வழி  புகையிரத பாதை அபிவிருத்திக்கான நிதியுதவியும் அவ்வாறே தாமதப்படுத்தப்பட்டுள்ளன.



தேசிய நிதியை கொண்டு இந்த அபிவிருத்தி பணியை முன்னெடுக்கவும் முடியாது. நாணயத்தை அச்சிட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளத்தை செலுத்துவது கூட சவால்மிக்கதாக உள்ளது.



புகையிரத சேவையினை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு தேவையான அடிப்படை கருவிகளை இறக்குமதி செய்ததிலும் நிதி நெருக்கடி காணப்படுகிறது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள புகையிரத தண்டவாளங்களை சர்வதேச விலை மனுகோரலுக்கமைய விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar21

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின

Sep24

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட

Sep27

திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பா

Jun30

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச

Mar02

எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற

May03

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய

Oct04

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Sep28

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக

Jun07

அரசியல்வாதிகள் தயாரில்லை!

நாட்டின் பொருளாதாரத்த

Jun10

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச

Oct18

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க

Aug16

வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள

Feb14

லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ

Jan21

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்

Mar21

இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா