More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!
மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!
Sep 20
மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற நிலையில் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேர் இன்று காலை இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.



இவர்கள் அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.



தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.



தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும் காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில்; தங்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பத்திரமாக மீட்டதாகவும் அகதிகள் தெரிவித்தனர்.



பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன

Mar16

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப

Aug03

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல

May03

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்

Nov12

விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

Sep24

கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை

Sep26

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன

Mar13

சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச

May03

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன

Jan17

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ

May19

நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார

Mar31

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்ச

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Sep21

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய