More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு
சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு
Sep 16
சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு

இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்களை நிறுவியுள்ளது.



இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 97சதவீதம் உயர்ந்துள்ளது என மெர்காம் இந்தியா ரிசர்ச் வெளியிட்ட 'மெர்காம் இந்தியா சோலார் ஓப்பன் அக்சஸ் மார்க்கெட் ரிப்போர்ட் 2022' என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 680 மெகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்கள் இணைக்கப்பட்டுள்ளது.



இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 223 சதவீதம் அதிகமாகும். கடந்த காலாண்டில் 210 மெகாவோல்ட் மட்டுமே நிறுவப்பட்டிருந்தது.



இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்கலன்கள் அனைத்தும் 'திறந்த அணுகல் மூலம் சூரிய மின்சக்தி' என்ற இலக்கை கொண்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்படுவதாகும்.



இத்திட்டமானதுஇ சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஏற்பாடாகும்.



இதில் உற்பத்தியாளர்கள் சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தத்தின் (பிபிஏ) அடிப்படையில் நுகர்வோருக்கு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுகின்றனர்.



அத்துடன்இ மின் உற்பத்தியாளர்களிடமிருந்துஇ திறந்த சந்தை மூலம் ஒப்பீட்டளவில் மலிவான மின்சாரத்தை நேரடியாக நுகர்வோர் வாங்குவதற்கு உதவுகிறது.



இந்த ஆண்டு இதுவரை திறந்த அணுகல் சந்தையில் நிறுவப்பட்ட சூரிய திறன் 6.5 ஜிகாவோல்ட்டிற்கு மேல் உள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.



இந்த திறனில் முக்கால் பகுதி கர்நாடகாஇ மகாராஷ்டிராஇ தமிழ்நாடுஇ உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மையம் கொண்டுள்ளது.



இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த மாநிலங்கள் நாட்டின் மொத்த நிறுவல்களில் 91சதவீதத்தை உருவாக்கியுள்ளன.



அத்துடன்  கர்நாடகா இச்செயற்றிட்டத்தில் முன்னணியில் இருப்பதால் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.



இது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அனைத்து நிறுவல்களில் 44 சதவீதமாகவும் இந்த ஆண்டு ஒட்டுமொத்த நிறுவல்களில் 38 சதவீதமாகவும் உள்ளது.



மேலும்இ திறந்த அணுகல் சூரிய மின்சக்தி திட்டங்களில் 2.8ஜிகாவோல்ட் திட்டங்கள் முன் கட்டுமான கட்டத்தில் உள்ளன எனவும் மேலும் தெரிவித்துள்ளது.



மெர்காம் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பிரியா சஞ்சய்இ 'பசுமை எரிசக்தி திறந்த அணுகல் விதிகள் நிறைய வாக்குறுதிகளைக் கொண்டுள்ளன. மேலும் அது இப்போது மாநிலங்களின் பேச்சில் நடக்க வேண்டும்.



திறந்த அணுகல் மூலம் புதுப்பிக்கத்தக்க பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.



திறந்த அணுகல் மூலம் புதுப்பிக்கத்தக்க பொருட்களை வாங்குவது வணிகங்களின் இயக்கச் செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct09

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த

Feb05

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா

May28

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

Aug11

கோவையில் 

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன

Feb12

உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டிய

May04

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர

May23

கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது ந

Oct21

மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப

Aug31

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி

Feb24

 மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப

Apr19

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப

Jul22

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வ

Mar31

இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு

May28

பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம