More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா
Sep 08
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா

இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரிக்கை விடுத்துள்ளார்.



மேலும், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறும், சர்வதேச சட்டத்தின்படி செயற்படுமாறும் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்த வேண்டும் 



மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.



இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளனர்.



நாகரீக உலகம் ஏற்றுக்கொள்ளாத கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதையும், அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.



அத்துடன், நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடையாமல் இழுத்தடித்து வருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.



சர்வதேச ஆதரவுடன் விசாரணைக்கு கோரிக்கை 



வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை மீளப் பெறவும், பாதுகாப்புப் படைகளை சீர்திருத்தவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.



இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது எனவும் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ வீரர்களின் விடுதலையை ரத்து செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பிலான அறிக்கையில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொடவின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul13

அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்

Sep23

வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள

Oct13

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்

Apr29

பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்த

Jun01

எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட

Sep06

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம

Jan25

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ

Apr05

நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை தி

Mar02

எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற

Mar09

பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட

Oct09

 கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும

Jun11

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும

Jan20

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா

Apr03

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட

Mar06

இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய