More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்!
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்!
Feb 23
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது. போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும். புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சித்ரவதைகளை தடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் விவகாரத்தில் மாநில, மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும். அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் கைதிகள் தாக்கப்படுவது, சித்ரவதை, மரணம் போன்ற புகார்கள் தெரிவிக்கப்படும்பட்சத்தில் மாநில மனித உரிமை ஆணையமும், கோர்ட்டுகளும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டுப்பெற வேண்டும். சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண்ணறிவு பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இந்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 25 மாநில யூனியன் பிரதேச அரசுகள் இன்னும் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் சித்தார்த்தா தவே தெரிவித்தார். அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில உள்துறைச் செயலாளர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி

Jun09

இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ

Aug30

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் 

பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத

May02

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட

Aug18

அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்

May09

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ

Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை

Mar09

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங

Oct09

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார

Jul24

சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட

Jan26

டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர ம

Feb04

சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை

Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

May29

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க