More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம்!
தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம்!
Dec 28
தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம்!

புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்ட தலித் மக்களை, அய்யனார் கோயிலுக்குள் கலெக்டர் அழைத்து சென்றதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர், வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள குழந்தைகளுககு உடல் நிலை பிரச்னை ஏற்படவே பரிசோதனையில் குடிநீர்தான் காரணம் என தெரியவந்தது. அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல் ஏறி கிராமத்தினர் பார்த்தபோது  மனித மலம் மிதந்தது தெரியவந்தது.



தகவலறிந்து சென்ற அதிகாரிகள் குடிநீர் முழுவதையும் அகற்றி, தொட்டியை கழுவி புதிதாக தண்ணீர் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் நேற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த மக்கள் இறையூர் கிராமத்தில் உள்ள டீ கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாக தெரிவித்தனர்.



அந்த டீ கடைக்கு சென்ற கலெக்டர் கவிதா ராமு விசாரணை நடத்தினார். பின்னர் கடைக்காரர் மூக்கையா(57) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக சாமி கும்பிடுவதற்கு தலித்துகளை அனுமதிப்பதில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், தலித் மக்களை அழைத்துக்கொண்டு அய்யனார் கோயிலுக்குள் கலெக்டர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் சென்று சாமி கும்பிட வைத்தனர். அப்போது எரையூர் கிராமத்தை சேர்ந்த சிங்கம்மாள் (35) சாமியாடுவதுபோல் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun23

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற

May12

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ

Feb13

குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.

Apr07

உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற

Sep15

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக

Mar08

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட

Apr08

சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்

Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Jul01

கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்

Apr08

திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக

May23

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர

Apr12

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல

May30

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு

Apr07

கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத

Apr08

 மேலும்  சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ