சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்...
நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
2022ஆம் ஆண்டு மிகவும் சவால் மிக்கதாக காணப்பட்டது.
கொவிட் பெருந்தொற்று நிலைமகளினால் நெருக்கடிகளை எதிர்நோக்கிய மக்களுக்கு இந்த விடுமுறைக் காலம் வழமையானதாக அமையப் பெற்றுள்ளது.
மகிழ்ச்சி, ஆரோக்கியம், அன்பு மற்றும் சமாதானம் நிறைந்த நத்தார் பண்டிகையாக அமைய பிரார்த்தனை செய்வதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.