More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு!
வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு!
Oct 26
வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு!

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.



வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு நேற்று நடைபெற்றது.



இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.



அவற்றுள் தமிழ் மக்களின் வரலாற்று தொன்மைமிகு குருந்தூர்மலை, வெடுக்குநாரி ஆலயம் தொடர்பான விவகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த இரண்டு அமைச்சர்களும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.



ஏற்கனவே திருகோணேஸ்வர ஆலயத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் நேரடியாக சென்று, ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினை சம்மந்தப்பட்ட தரப்புக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. –






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங

Jan15

நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்

Jul27

24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்

Feb25

ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 க

Feb03

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப

Mar21

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட

Aug05

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண

Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்

Oct13

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக

Feb05

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட

Jun16

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்

Feb02

இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின

Jan20

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த

Mar21

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே

Mar02

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய